மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே
வரலாற்று சிறப்புமிக்க ஒரே கிராமத்தில் பழமை வாய்ந்த
சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,
எல்லையம்மன், கரிவரதராஜ பெருமாள், தான்தோன்றீஸ்வரர், அங்காளம்மன், வீரபத்திரர், முனீஸ்வரன், உள்ளிட்ட
50 திருத்தளம் கொண்ட பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் முனீஸ்வரன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், உள்ளிட்ட பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்கல் புறப்பட்டு பிரதிஷ்டை செய்த முனீஸ்வன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் மூலவரான முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.