ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பால் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனையில் தென்னிந்திய அளவில் முன்னனி நிறுவனமாக மில்க்கி மிஸ்ட் செயல்பட்டு வருகின்றது.பால் பொருட்கள் மட்டுமின்றி பீட்சா,சீஸ் பொருட்கள்,,ரசகுல்லா,ரசமலாய் போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மில்க்கி மிஸ்ட்,தனது விற்பனை சந்தையை விரிவாக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிரத்யேக நேரடி விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை சாலையில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியுள்ளது.
லம்போதரா மார்க்கெட்டிங் இணைந்து துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா கிளை உரிமையாளர் அர்ஜூன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார்,தலைமை செயல் அதிகாரி ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய விற்பனை மையத்தை திறந்து வைத்தனர்.
புதிதாக துவங்கப்பட்ட விற்பனை மையம் குறித்து கிளை உரிமையாளர் அர்ஜூன் கூறுகையில்,இந்த நவீன வகை பார்லரில், பனீர், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி, நெய், லஸ்ஸி, கிரீம், பாயாசம் உறைந்த பீட்சா,புரோட்டா, மற்றும் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் அசல் எனும் பிராண்டின் புட்டு பொடி,பாயசம் மிக்ஸ்,மற்றும் ஸ்மார்ட் செஃப் பிராண்டின் பனீர் பிங்கர், க்ரஞ்சர்ஸ்,சீஸ் பால்ஸ்,என அனைத்து வகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு,குடும்பத்துடன் ஜீஸ் வகைகள்,துரித உணவு வகைகள் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வகையில் குளிரூட்டப்பட்ட வசதியிடன் இட வசதி இருப்பதாக தெரிவித்தார்…மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் ஐஸ் க்ரீம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடதக்கது..