திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் காரல்ஸ் கடந்த கல்வி ஆண்டில் செங்கம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை +2 பொதுத்தேர்வை மாணவ மாணவிகள் எழுதிய நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களுக்கு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செங்கம் தனியார் பள்ளி பயின்ற மாணவன் 337 மதிப்பெண் எடுத்ததால் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.