தூத்துக்குடி,
தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3சென்ட் பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் முகேஷ் (21) என்பவர் கடந்த தென்பாகம் சக்திநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது தூத்துக்குடி கோட்ஸ் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில்தேவ் (23) என்பவரது நண்பனின் இருசக்கர வாகனத்தை எதிர்பாராத விதமாக முகேஷ் இடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரியப்பன் மற்றும் அவரது நண்பரான தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சேர்ந்த கமல்ஹாசன் மகன் சாரோன் ராஜ்குமார் (19) ஆகியோர் சேர்ந்து முகேஷிடம் தகராறு செய்து தவறாக பேசி கை மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முகேஷ் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரிகள் கபில்தேவ் மற்றும் சாரோன் ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் கபில்தேவ் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட 4 வழக்குகளும், சாரோன் ராஜ்குமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *