திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 93-வது
உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், திருவாரூர் மாவட்ட டிசிடியூ தலைவர் குலாம் மைதீன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர் வலங்கைமான் கடைவீதி வழியாக வந்த போது பாதயாத்திரை குழுவினர் காந்திய கொள்கைகளையும், ராஜாஜி, காமராஜர் போன்ற தேச தலைவர்களின் பண்பைக் குறிக்கும் வாசகத்தை விளக்கி வந்தனர். பாதயாத்திரை குழ தலைவர் சக்தி செல்வகணபதி வலங்கைமான் கடைவீதி பேரூந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்தத மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் ராஜு, கலியமூர்த்தி, சபாநாயகம் உள்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திராளக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *