கு. ஜெயபாலன் செய்தியாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சொரயப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் டி.வியில் கல்வி நிழ்ச்சிகளைக் காண உதவும் வகையில்இராணுவ வீரர் இரத்தினம் அறக்கட்டளை அறங்காவலர்கள் டாக்டர் ராமசாமி, எல்.ஐ.சி.ராஜேந்திரன், பொறியாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர்,
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும், அப்பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களுக்கு பரிட்சை அட்டை, எழுதுபொருள் உபகரணங்கள் அனைத்தும் கொண்ட பெட்டிகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு சொரையப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இராஜேந்திரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் சுகவனம் ராஜா, ஓய்வுபெற்ற ஓஎன்ஜிசி தலைமை ஜெனரல் மேனேஜர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் செல்வி வரவேற்றார்.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.