பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது ஆலாடு ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள வெள்ளக்குளம் பொழுது விடிந்தான் மேடு பகுதி யில் புகழ் பெற்ற சக்தி வாய்ந்த பழமை வாய்ந்த,ஸ்ரீ ஸ்ரீ விஜயரா கவ வைகுண்ட பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் உற்சவ விழா நடைபெறு கிறது அதன்படி கடந்த 3-ஆம் தேதி தொடங்கி வரும் 8-ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதனை அடுத்து இன்று சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, யாகசாலை பிரவேசம், 7-ஆம் தேதி ஸ்ரீ சீனி வாச பெருமாள் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகிறது இதில் 8-ஆம் தேதி நடைபெறும் உற்சவத்தில் திரைப்பட நடிகை குட்டி பத்மினி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற உற்சவ விழாவில் அதிமுக திருவ ள்ளூர் வடக்கு மாவட்ட செயலாள ரும் முன்னாள் பொன்னேரி தொ குதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பி பலராமன், திருவள் ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் கிருஷ்ணா புரம் கூட்டுறவு வங்கி தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கிருஷ் ணாபுரம் பிடி பானு பிரசாத், அதி முக நிர்வாகி வினோத், ஸ்ரீதர், ஆலாடு ஊராட்சி மன்ற தலைவர் பிரசாத்,தடப்பெரும்பாக்கம் ஊராட் சி மன்ற தலைவர் ஆர் பாபு, தேவ தானம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், உள்ளிட்டபலர் சிறப்பு அழைப்பாளர்களாக கல ந்து கொண்டு சுவாமியை வழிபட்ட னர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளக்குளம் பொழுது விடிந் தான் மேடு கிராம பொதுமக்கள் விஜயராக வைகுண்ட ஆலய டிரஸ்ட் குழுவினர் ஆகியோர் செய் திருந்தனர்.
பிரசித்தி பெற்ற வைகுண்ட பெரு மாள் கோவில் மேலும் சிறப்பாக புதுப்பிக்கப்பட உள்ளதால் பொது மக்கள் பக்தர்கள் தங்களால் முய ன்ற நிதி உதவி, பொருள் உதவி யை, வழங்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.