மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
தமிழக முதல்வரும் சட்டமன்ற , பாரளுமன்ற உறுப்பினர்களும் . மந்திரிகளும் , மருத்துவர்களும் , செவிலியர்களும் இரவு பகல் பாராமல் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பணியாற்றியதின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது என மன்னார்குடி அருகே இரண்டு ஆண்டு சதனைவிளக்க பொதுக்கூட்டத்தில் பேச்சு.
திருவாரூர் மாவட்டம் வடூவூரில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழணிமாணிக்கம் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம்.பாலு , கழக சட்டதிட்ட திருத்தகுழு உறுப்பினர் ராஜமாணிக்கம் , தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் , தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனையை விளக்கி பேசினார்கள் .
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையமங்கலம் பாலு பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்கிற பெயர் எடுத்த தலைவராக விளங்குகிறார் இதை நாம் கூறவில்லை இந்தியா டுடே பத்திரிக்கை தான் கூறியுள்ளது இது பெருமிதமாக உள்ளது என்றார் .
அதனைத் தொடர்ந்து பேசிய தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில் மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனும் மருத்துவ மந்திரியாக இருக்கின்ற மா சுப்பிரமணியனும் தமிழக முதல்வரும் கொரோனா காலகட்டத்தில் தூங்கவே இல்லை மருத்துவர்களும் தூங்கவில்லை மருத்துவ ஊழியர்களும் , செவிலியர்களும் தூங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் , சட்டமன்ற உறுப்பினர்களும், மந்திரிகளும் இரவு பகல் பாராமல் உழைத்ததன் காரணமாக இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பணியாற்றியதின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றார் .
இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கழக ஒன்றிய நிர்வாகிகள் பலரும் , ஏராளமான பொதுமக்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்