ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நுழைவு முகப்பு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தளபை வகித்தார்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் வெளியான கேரளா ஸ்டோரி வெளியாக உள்ளபர்ஹானாஏற்கனவெ வெளியாகி கண்டனங்களை பெற்ற புர்கா போன்ற திரைப்படங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தின் மாநில செயலாளர் முகமது ஒலி கண்டன உரை ஆற்றினார்கள் தமது உரையில்
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அறியாத நிலையில் சிலரும் இஸ்லாமியர்களின் மீது அவதூறு பரப்புவதன்
மூலம் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் சங்க பரிவார அமைப்புகளை சார்ந்தவர்களின் உந்துதலோடுசமீபகாலமாக பல படங்கள் வெளியாகி வருகின்றன என்றும்குறிப்பாக கேரளா ஸ்டோரி என்று நேற்று வெளியான திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என்று சொல்லப்பட்டுமிகப்பெரும் பொய்யை மக்கள் மத்தியில் பதிய வைக்கிற முயல்கிறது என்றும் நாசிக்களின் அடியொட்டி செயல்படும் சங்க பரிவாரங்கள்நாசி அமைப்பை சார்ந்த கோயபல்ஸின் தத்துவமான தொடர் பொய் உண்மையாக நம்பப்படும் எனும் அடிப்படையில் ஒரு பெரும் பொய்யை
கட்டமைத்துள்ளனர் 32000 பேர் ஆப்கானிஸ்தான் சென்றார்கள் இஸ்லாமியர்களாக கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டார்கள் என்று சொல்லிஉள்ளனர்அந்த 32000 பேர் யார் என்பதை இந்த பொய்யர் கூட்டம் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்

கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பாஜக மதவாத ஓட்டுக்களை ஒன்று சேர்க்க இந்த கேரளாஸ்டோரி திரைப்படத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றார் மேலும் புர்ஹா பர்ஹானா படங்களில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள்பறிக்கப்படுவது போன்று சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கினறனர் இந்த படத்தை எடுத்தவர்களோடு பொது மேடையில் விவாதத்திற்கு
தயார் என்றும் அவர்கள் வைத்த கருத்து ஆபத்தானது அரைவேக்காட்டுத்தனமானது சமூக பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறினார்

இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அடுத்த ஒருமாத காலத்திற்கு பொது மக்களை நேரடியாக சந்தித்து இந்த அவதூறுகளைகளையும் வண்ணம் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் எழுச்சிமிக்க இந்த

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா மாவட்ட பொருளாளர் முகமது சலீம் மாவட்ட துணை தலைவர் முகமது பாசித் துணை செயலாளர்கள் தாரிக்யாசர்மாலிக் சக்கரைகனி மற்றும் மாவட்ட மாணவரணி தொண்டரணி மருத்துவ அணி செயலாளர்கள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் பொது மக்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *