புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோநகர் வார்டு பகுதியான சாந்தி நகர், ஒன்றாவது தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு, ஆகிய தெருக்களில் பாதாள கழிவுநீர் தோட்டில் இருந்து கழிவுநீர் மக்கள் வசிக்கும் தெருப்பகுதிகளில் வெளியேறிய வண்ணம் உள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரு(எ)குப்புசாமியிடம் புகார் தெரிவித்தனர். இது பற்றி பலமுறை பொதுப்பணித்துறை கழிவுநீர் உட்கோட்ட பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்து…. அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டபோது.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை…. நேரில் பார்வையிட்டு அடிக்கடி பாதாள கழிவு நீர் தொட்டியில் அடைப்பை ஏற்படாதவாறு அடைப்புகளை சரி செய்யுமாறு அங்கு பணிபுரிந்த ஊழியர்களை கேட்டுக் கொண்டார்…