முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, போளூர், பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மகள் திருமதி மல்லிகா, ( 65), விநாயகம் மகள் செல்வி. ஹேமலதா. ( 16) மற்றும் மாரிமுத்து மகள் செல்வி. கோமதி, ஆகியோர் இன்று (9.5.2023) காலை திருத்தணியிலுள்ள பழைய கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். தற்போது கோடை காலமாகையால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளங்கள், ஏரிகள், அருவி மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். அவ்வாறு குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளிப்பதோடு பல குடும்பங்களை தீரா துயரிலும் ஆழ்த்தி விடுகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போதுமான நீர்நிலைகளை பாதுகாப்புடன் விழிப்புணர்வினை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பயன்படுத்த வேண்டுமென்ற துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தவேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *