மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்டம் சார்பாக திமுக   அரசின் 2 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  செக்கடியில்   நடைபெற்றது  நகர் கழகச் செயலாளர்  நகராட்சி சேர்மன் முகமது யாசின் தலைமையில் நடந்தது 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா  பேசுகையில்  தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று 700 நாள் ஆகின்றது அதில் 647 நாட்கள் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் 1 ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரம் பயனாளிகளை சந்தித்துள்ளார்

அது மட்டுமா  தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில்  காலை உணவு திட்டத்தை முதலில்  10 மாவட்டத்தில்  செப்டம்பர் மாதத்தில் துவக்கி வைத்தார்  அதனைத் தொடர்ந்து  தமிழக முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தினர்  தொடர்ந்து  பேசுகையில் கல்லூரி போகும் பெண்களுக்கு. புதுமைப்பெண் திட்டத்தில்  கீழ்  ரூபாய் 1000  வழங்கப்பட்டு வருகின்றது. 

 இந்த இரண்டு வருட காலத்தில் இந்தியாவின் பண வீக்கம் மதிப்பு 85: 5. சதவீதம் உயர்ந்துள்ளது  காரைக்குடியில் எச் ராஜா சொன்னார் மு க ஸ்டாலின் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று சோவி போட்டும்  முத்து போட்டும்  கட்டை போட்டும் பார்த்தார்கள்  இப்ப அவரே சொல்லுகிறார் மு க ஸ்டாலின் டேஞ்சர் என்று  தமிழ்நாட்டிலே முதல்முறையாக  கோவில்களில் எல்லா மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்  என்று திட்டத்தை கொண்டு  வந்தார் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறியீடு 17 ஆக இருந்தது  இந்த இரண்டு வருட காலத்தில்  3 சதவீதமாக உயர்ந்துள்ளது இவ்வாறு பேசினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *