பொன்னேரி

திருநிலை ஊராட்சியில் உள்ள கோவில் திருப்பணிக்காக ஊரா ட்சி மன்ற தலைவர் அம்மு சிவக் குமாரிடம் மகளிர் குழு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருநிலை ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட சென்னை 103,  47 திருநிலை கிராமத்தில் புகழ்ப்பெற்ற, சக்தி வாய்ந்த, பழமையான அருள்மிகு பொன்னி யம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தற்போது சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக பொதுமக்கள் தங்களா ல் முடிந்த நிதி உதவியும் பொருள் உதவியும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநிலை ஊராட்சி க்குட்பட்ட கவுண்டர் பாளையம் டான்வப் பண்ணைப் பெண்கள் மகளிர் குழு எண் 1, எண் 2, எண் 3, ஆகிய குழுக்கள் சார்பிலும் மற் றும் வீணை பெண்கள் மகளிர் குழு,சூர்யா மகளிர் சுய உதவி குழு, தாமரை பெண்கள் சுய உதவி க்குழு, சார்பில் என 30 ஆயிரம் நிதி  வழங்கப்பட்டது. மேலும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட கோவில் மேடு பகுதியில் உள்ள ஆதிபரா சக்தி மகளிர் குழு, எல்லையம்மன் மகளிர் குழு சார்பில் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். மேற்கண்ட 40ஆயிரம்  நிதிகளை கோவில் திருப்பணிக்காக நிர்வா கப் பணியினை செய்து வரும் திரு நிலை ஊராட்சி மன்ற தலைவர்  அம்மு சிவக்குமாரிடம் மேற்கண்ட மகளிர் குழுவினர் நேரில் வழங்கி னர்.

 மேலும் இக்கோவிலுக்கு திருப்ப ணிக்கான நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை பொதுமக் கள் வழங்கிடுமாறு கோவில் நிர் வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *