அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தனராஜ், கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் பெரியமாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், அவர்களின் மாடு பரிசாக பெற்றது தொடர்ந்து சிறப்பு பரிசுகளா அண்டா மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டது. சிறிய மாட்டில் 19 ஜோடிகள் பங்கேற்றன.
அதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், அரும்பனூர் கள்ளந்திரி மாடுகள் இணைந்து பெற்றது மற்றொரு சுற்றில் முதல் பரிசு தேனி மாவட்டம் சிரப்பாறை வெண்டி முத்தையா, அவர்களின் மாடும் இரண்டாம் பரிசை கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன், அவர்களின் மாடும் பெற்றது,
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம பொதுமக்கள் மாட்டு வண்டி பந்தய குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.