தென்காசி மாவட்டம்சிவகிரியில் உள்ளசி.பா ஆதித்தனார் திருமண மண்டபத்தில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்வடக்கு மாவட்ட தலைவர் கராத்தே குமார் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன், பொருளாளர் சுப்பிரமணியன், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார், ஆகியோர் முன்னிலைவகித்தார்.
இந் நிகழ்வில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசிய அகரக்கட்டு நாடார் தமிழகம் முழுவதும் மே மாதம் 24 ஆம் தேதியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பனை தொழிலாளர்கள் தினமாக அறிவித்து இருக்கிறது சிவகிரி பகுதியில் அதிகமான பனைத் தொழிலாளர்கள் இருகிறர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற பனைத் தொழிலாளர்கள் மே 24ஆம் தேதி பனைத் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என்றார்.
மேலும் மே 24 ம் தேதி தமிழர் சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் ஆகும்தமிழக அரசு பனைமீது திணிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் போராடியவர் அன்றைய அரசு பனை வரியை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன காரணத்தினால் தான் வகித்த மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்
அதன் பிறகு பனைத் தொழிலாளர்களோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி பனை வரியை ரத்து செய்யது வெற்றி கண்டவர். ஆகவே தமிழ் நாடு முழுவதும் பனை தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமார், காளீஸ்வரன், செயலாளர் : மதன், முருகன், பொருளாளர் சந்துரு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்