ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்கல்விக்கடன் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 225 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


அதனைத்தொடர்ந்து கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து வாழ்த்து பெற்றனர் கூட்டத்தில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் மாவட்ட கல்வி அலுவலர் தபுகழேந்தி தனிதுணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம்பொறுப்பு அழகர்சாமிமாவட்ட வழங்கல் அலுவலர் கீதாமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *