ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி சத்துணவு கூடங்களில், குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் நுறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, ஏனையவற்றுக்கிடையே. மாண்புமிகு அமைச்சர் (சமூக நலன்-மகளிர் உரிமை) அவர்கள் பின்வரும் அறிவிப்பினை செய்துள்ளார்கள்:- சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும். 2. மேலே. நான்காவதாகப் படிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதத்தில், குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது போல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 3.மேலே, ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட சமூக நல இயக்குநரின் கடிதத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 4. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர்/ சமூக நல இயக்குநர், தமது கடிதங்களில் குழந்தைகள் மையங்கள்/சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லத்தை அங்கன்வாடிப் பணியாளர்கள் / சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கும், அனுமதி அளித்து கேட்டுக்கொண்டுள்ளனர். 5 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும இயக்குநர்/ சமூக நல இயக்குநரின் கருத்துருக்களை கவனமுடன் பரிசீலனை செய்து, அவற்றை ஏற்று, குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கவும், குழந்தைகள் மையங்கள்/ சத்துணவு மையங்களில் பயனடைந்துவரும் குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதரபொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் / சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது. 6. மேலே பத்தி-5ல் உள்ள ஆணையினை செயல்படுத்துமாறு வட்டாரங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக தக்க அறிவுரை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலாளர்/ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், சமூக நல இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *