வலங்கைமானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகள் +2 தேர்வில் வெற்றி பெற்ற சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்குபெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் பாராட்டு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் மேனிலைப்பள்ளி யில் +2தேர்வில் வெற்றி பெற்ற சிறுபான்மை மாணவ -மாணவிகளுக்கு பாரட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் காதர் உசேன், ஜமாலி ஜாமியா மஸ்ஜித் தலைவர் அப்துல் மாலிக் ஆகியோர் தலைமையில், செயலாளர் அப்துஸ் சலீம், துணைத் தலைவர் ஜாகீர் உசைன், பொருளாளர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் பிளஸ்+2 தேர்வில் வெற்றி பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சஹானாஜ, ஜமானதாஜ், சப்ரின், தாஹிராபானு, ஸ்ரீ சங்கார மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் அஜீஸ், அப்துல் ரகுமான் ஆகியோருக்கு நிர்வாகிகள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
முன்னதாக டிசிடியூ தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் குலாம் மைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் உயர்கல்வி வழிகாட்டு, மாணவர்களின் மேம்பாடு ஆகியவை பற்றி பேசினார்கள். இதில் ஜக்கிய ஜாமத் ஜாஹின்ஹீசைன், ஜாமலி ஜாமியா மஸ்ஜித் அன்வர் அலி, கோல்டன் மளிகை சரீப், அலாவுதீன், மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ஹாஜ்நத் நாகூர் கனி அனைவருக்கும் நன்றி கூறினார்.