வேப்பூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கார் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7- வயதுள்ள சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்சென்னை, கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்தவர் காதர்,வயது 37 என்பவர் தனது மனைவி அசினா, காதரின் நண்பரான செந்தில்குமார் இவரது மனைவி ஆதி லட்சுமி, இவர்களது மகன்கள் பிரணவ், பிராந்தில்ஸ் ஆகியோருடன் டி.என்., 02 பிஏ 3668 ஹூண்டாய் காரில் சுற்றுலாவிற்கு கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்தனர்

காரை சென்னை, கொய்யாதோப்பைச் சேர்ந்த காதர்,வயது 37 ஓட்டினார்.இவர்களது கார் மே 15 ந் தேதி நண்பகல் 12:30 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், காரை ஓட்டி சென்ற காதர் மகன் இஸான்,என்ற 7 வயதுள்ள சிறுவன் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து விழுந்து அடிபட்டு இறந்தார்.

காரில் பயணித்த காதர் உட்பட 6 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்கள்சென்னையிலிருந்து சுற்றுலாவிற்காக கொடைக்கானல் சென்ற குடும்பத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளஇந்த குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *