ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்ற இன்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட சேர்மன் சூரியகலாகலாநிதி, ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.