பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது.
இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள், எடுத்தும் பக்தர்கள்
பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வலம் வந்து, அருள் பாலித்து கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் நேர்த்தி கடன் செலுத்தினர்.