திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் ராமஜெயம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச் செல்வம், செவிலியர்கள் ஸ்டெல்லா, காயத்ரி, நித்யா, கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தாய்மார்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *