உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் காலணி பகுதியில் 500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு மேலாக குடிநீர் தங்கள் பகுதிக்கு மட்டும் வரவில்லை என்று பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விருதாச்சலத்தில் இருந்து பச்சைவெளி வழியாக உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து 100 க்கும் மேற்ப்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நாளை குடிநீர் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.