கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்னை குரோம் பேட்டை பகுதியிலிருந்து 17 பேர்கள் சுற்றுலா வந்து இன்று வால்பாறையிலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த போது வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள 5 வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 11 பேர்கள் காயமடைந்தனர் சம்பவம் அறிந்து விரைந்து சென்ற இரண்டு 108 வாகனங்கள் காயமடைந்தவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர் மேலும் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இச்சம்பவத்தில் அதிஷ்ட வசமாக அனைவரும் உயிர்தப்பியுள்ளனர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *