அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சியில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வீர சாவர்க்கர் பிறந்த நாள் முன்னிட்டும் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை பாரதப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்ததை முன்னிட்டு இருக்கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த விழாவில் இந்து மக்கள் கட்சியின் சோழவந்தான் தொகுதி தலைவர் பூமிநாதன், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மகளிர் அணி நிர்வாகி சாந்தகுமாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *