பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான் எதிர்த்தேன். அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை. தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை. அவர் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார். மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு. அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்றும், வடக்கன்ஸ் என்றும் பேசி வருகிறார். அவர் அமைச்சராக நீடிக்க தகுதியை இழந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *