தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான டிராக்ஸ் இண்டர்நேஷனல் கார்னிவல் யோகா போட்டி கம்போடியா நாட்டில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது.
கடந்த 27 ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, அர்ஜெண்டினா, தாய்லாந்து,கம்போடியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில்,ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக்,அத்லெட்,உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெறும்,அக்ஷரா,அஸ்வின்,தக்ஷதா கோபால், ஷர்விகா ஸ்ரீ,சித்தேஷ்,மோகித் ஆகிய மாணவ,மாணவிகளும்,சீனியர் பிரிவில் சிவக்குமாரும் கலந்து கொண்டனர்..,பிரபல யோகா உலக சாதனை மாணவி வைஷ்ணவியிடம் பயிற்சி பெற்ற இந்த ஏழு பேரும் முதல் பரிசாக தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கம்போடியா நாட்டில் யோகா போட்டியில் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணன் உட்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.