கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள நகராட்சி மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்களை சந்தித்த நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வால்பாறை நகர் பகுதியில் ஆங்காங்கே ஒருசில புகார்கள் வருவதை தவிர்க்கும் வகையில் பணிகளை செம்மையாக செய்யவேண்டும், பணிக்காலத்தில் முழுபாதுகாப்பு நலன் கருதி கையுறை, முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், குறிப்பிட்ட கால நேரங்களில் பணிகளை செய்து முடிக்க வேண்டும், மேலும் தங்களின் தேவைகள் என்னவென்று எனக்கு தெரிவித்தால் தான் நான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்து கொடுக்க முடியும் என்றும், நமது வால்பாறை நகராட்சியை தொடர்ந்து தூய்மை நகரமாக வைத்துக்கொள்ள அனைவரும் மனமுவந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

பின்பு பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவைகளை விரைவில் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *