புதுச்சேரி நகரின் மத்திய பகுதியான மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட பேருந்து நிலையமாக தரம் உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதி உதவி ரூபாய் 31. கோடி செலவில் பணிகள் நடைபெற உள்ளது.
இப்பணிகளை புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி அவர்கள் தலைமையிலும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர்
K.லட்சுமிநாராயணன் அவர்கள் முன்னிலையிலும் மேலும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான
G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் முன்னிலையிலும் மேற்கண்ட பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
மேலும் இத்திட்டத்தினை தேசிய கட்டுமான கழகம்( NBCC) மேற்கொண்டு பணிகளை 8 மாத காலத்தில் முடிப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது…. இதன் மூலம் தினசரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் மக்கள் பயன்பெறும் விதமாக திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு.ரவிச்சந்திரன், பொது மேலாளர் திருஞானம் மேலும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன, உதவி பொறியாளர் நமச்சிவாயம், மற்றும் தேசிய கட்டுமான கழகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும், மகளிர்களும், இளைஞர்களும் மற்றும் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடை வியாபாரிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், டெம்போ ஓட்டுனர்களும், பேருந்து ஓட்டுநர்களும், வியாபாரிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.