திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இவர் சிபிஎம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, சிவில் பிரச்சனைகளில் சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்வது என சட்ட விரோதமாக செயல்படுகிறார். மேலும் காவல் நிலையத்திலேயே வரவு செலவு பஞ்சாயத்து செய்வது இவரது வாடிக்கையாக உள்ளது.

அதுமட்மின்றி பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக சில அமைப்புகளுக்கு மட்டும் ஊர்வலம் நடத்த அனுமதிப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் அமைப்புகளுக்கு தடை விதிப்பது போன்ற சட்டத்துக்கு எதிரான செயல்களில் இவர் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் .

எனவே பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முன்னதாக காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்வதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *