தென்காசி

தூத்துக்குடியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 52 பதக்கங்களை பெற்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் அசோசியேசன் சார்பில் தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது.
இப்போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தென்காசி மாவட்டம் சார்பில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகடமி மாணவர்கள் 37 பேர் கலந்து கொண்டு, 500 மீட்டர், 1000 மீட்டர் ஸ்கேட்டிங்கில் மொத்தம் 52 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

இவர்களுக்கு டாக்டர் ஜேம்ஸ்சுந்தர்சிங் பதக்கங்களை வழங்கினார் தென் மண்டல அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகடமி மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் மாஸ்டர் கணேஷ், மாஸ்டர் ராம்ராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *