வலங்கைமானில் ஆட்டோ-பைக் மோதிய
விபத்தில் இருவர் படுகாயம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த
சந்திரசேகரபுரம் மேல பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மகன்தினேஷ் (30). இவர் லோடு ஆட்டோ வாடகைக்கு ஒட்டி வருகிறார்.
நேற்று மாலை ஆட்டோவில் ஏற்றி வந்த விறகை,
வலங்கைமான் பேரூராட்சி புங்கஞ்சேரி தெருவில் இறக்கிவிட்டு,குடவாசல் ரோட்டின் வழியாக வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
புங்கஞ்சேரி தெருவைச் சேர்ந்த மணிமகன் அசோக் (27) கூலித் தொழிலாளி, இவரும்,வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சி, பண்டித சோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர் என்பவர்மகன் அசோக்(40) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் பைக்கில் வலங்கைமானில் இருந்து எதிரே வந்தனர்.
வலங்கைமான் கீழத்தெரு பகுதியில் ஆட்டோவும் பைக்கும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பைக்கில்வந்த அசோக் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு,தலையில் படுகாயம் அடைந்தனர். அவர்களைஅங்கிருந்தவர்கள் மீட்டு,வலங்கைமான் வட்டாரமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.