சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான கூலித்தொழிலாளி மகனுக்கு உதவித்தொகை

மாவட்ட திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்:-

தென்காசி மாவட்டம், ஆய்குடி அருகேயுள்ள கண்டு கொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரசேகர் என்பவரின் மகன் சி.மகேந்திரசுமித் இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

யோகா போட்டியில் சாதனை படைத்த இம் மாணவன் வருகிற செப்.9,10ந்தேதிகளில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா போடடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

இருப்பினும் அங்கு செல்வதங்கு போதிய பண வசதியின்றி மாணவன் மகேந்திரசுமித் தவித்து வருகிறான்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணராஜா ஆகியோர் இணைந்து, அம்மாணவனை நேரில் அழைத்து பாராட்டியதுடன், மாவட்ட திமுக சார்பில் உதவித்தொகையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன், ஆலங்குளம் வடக்கு செயலாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், சாம்பவர்வடகரை மாறன், சுதன்ராஜா, மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ஹபிப்நிஷா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ், சிவகுமார்,முகமது அப்துல் ரகீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *