பொன்னேரி மாணவர் விடுதியில் சிற்றுண்டி ருசித்து ஆய்வு செய்த அமைச்சர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் உள்ள ஆதிதிராவிடர் நலம் அரசு கல்லூரி மாணவர் மாணவி கள் தங்கியுள்ள விடுதிகளை ஆதி திராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழி நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது மாணவர்களுக்கு வழங்கப்படும் மாலை சிற்றுண்டி வாங்கி ருசித்துப் பார்த்தார். பின் னர் மாணவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவு ரைகளை வழங்கினார்.
அப்போது பொன்னேரி தாசில்தார் மதிவா ணன், மற்றும் அரசுதுறை அதிகா ரிகள் திமுக சேர்ந்த மாவட்டச் சேர் மன் உமா மகேஸ்வரி, பொன்னேரி நகரம் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்டத் துணைச் செயலர் கதிரவன், நகரச் செயலாளர் வக்கீல் ரவிக்குமார், மீஞ்சூர் சேர்மன் ரவி, ஒன்றிய செயலாளர்கள் காசு ஜெகதீசன், சுகுமாரன், ஆரணி நகர செயலா ளர் முத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், தேவதானம் கூட்டுறவு சங்க துணை தலைவர் பா. நேதாஜி, டாக்டர்தீபன், ஒப்பந்தக்காரரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரு மான பா.ஜோதீஸ்வரன், மாணவர் விடுதியின் வார்டன் அன்பழகன், மாணவி விடுதி வார்டன் மரியா ஜெயந்தி, மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் உள்ளா ட்சி பிரதி நிதிகள் என பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக மாணவர்கள் தங்கி இருக்கும் அனைத்து அறைகள் கழிப்பறைகள் சுகாதாரமாக உள் ளதா என ஆய்வு செய்தார்.