மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து பல்வேறு கடன் திட்டங்கள், வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு கடன் பெறுவது குறித்து உதவி இயக்குனர் மற்றும் புலனாய்வாளர் மூலம் தெளிவாக மக்கள் பயனடையும் வண்ணமாக எடுத்துக் கூறப்பட்டது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் எழபதற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் முஹம்மது மசூத் புலனாய்வாளர் பாண்டியராஜா, மகளிர் திட்டம் உதவி திட்ட மேலாளர் மரியா தாட்கோ உதவி மேலாளர் பாலசுப்பிரமணியன் வாழ்ந்து காட்டுவோம் அணி தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ )
பொற்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.