வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள சேங்காலிபுரம் கிராம ஊராட்சி, சர்வ மானியம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள சேங்காலிபுரம் ஊராட்சி, சர்வ மானியம் கிராமத்தில் தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, சேங்காலிபுரம் ஊராட்சி தலைவர் கண்ணன் தலைமை வகித்தார், ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாவதி சந்திர போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் பிரதீப், உதவி தோட்டக்கலை அலுவலர் ரவிச்சந்திரன், முருகன், உதவி வேளாண்மை அலுவலர் (திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்) ஆகியோர் கலந்துகொண்டு பயிர் சாகுபடி மேலாண்மை தொழில்நுட்ப அறிவுரையை எடுத்துரைத்தனர். மா-1,கொய்யா-1, எலுமிச்சை-2, நெல்லி-1, சீதாப்பழம்-1 என மொத்தம் ஆறு செடிகள் அடங்கிய தொகுப்பின் விலை ரூபாய் 200/- அரசு மானியம் ரூபா 150, பயனாளியின் பங்களிப்பு தொகை ரூபாய் 50.இதில் 300 பயனாளிகள் ஆர்வமுடன் தொழில்நுட்ப ஆலோசனைகளை கேட்டு பழச் செடி தொகுப்புகளை வாங்கி சென்றனர், மேலும் பழச்செடி தொகுப்பு தேவைப்படும் நபர்கள் உழவன் செயலி மூலமாகவும்,www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அனுகி பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டார்.