பாஜகவுடன் – அ தி மு க மறுபடியும் கூட்டனி வைத்து கொள்ள மாட்டார்கள் என்பதை இஸ்லாமிய தலைவர்களே உங்களால் வாக்குறுதி கொடுக்க முடியுமா ? காயல் அப்பாஸ் குற்றசாட்டு !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த CAA – NRC – NPR – முத்தலாக் தடை போன்ற சட்டங்களை எதிர்த்து உரிமைக்காக லட்சம் கனக்கான இஸ்லாமியர்கள் தன் எழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
உரிமைக்காக போராடும் இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்க்காக அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் மற்றும் காவல் துறையை ஏவி விட்டு தடியடி நடத்தியது அ தி மு க அரசு என்பதை ஒரு போதும் இஸ்லாமிர்கள் மறக்க மாட்டார்கள்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டம் நடத்தினர்.
ஆனால் கொஞ்சம் கூட இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான செயலை செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை சுட்டி காட்ட விரும்பு கின்றோம். .
ஏனென்றால் CAA – NRC – NPR – முத்தலாக் தடை சட்டம் – போன்ற சட்டங்களுக்கு பாராளு மன்றத்தில் அ தி மு க – ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து உள்ளது என்பதை கூட இஸ்லாமிய இயக்க தலைவர்கள் உணராமல் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வருவது ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கும் செய்யும் துரோகம் ?
பாஜக கூட்டனிலிருந்து அ தி மு க வெளியேறியவுடன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளிக்கும் இஸ்லாமிய இயக்க தலைவர்களே மறுபடியும் பாஜகவுடன் அ தி மு க கூட்டனி வைத்து கொள்ள மாட்டார்கள் என்பதை இஸ்லாமிய சமுதாயத்திற்கு உங்களால் வாக்குறுதி கொடுக்க முடியுமா ? CAA – NRC – NPR – முத்தலாக் தடை சட்டங்களை அ தி மு க ஆதரித்த காரணத்தால் அ தி மு க அரசை எதிர்த்தி போராடிய இஸ்லாமிய இயக்க தலைவர்களே நீங்களே எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பாராட்டையும் தாங்களின் கட்சியின் ஆதரவையும் தெரிவிப்பது இஸ்லாமிய சமுதாயத்தை ஏமாற்றும் செயலாகும். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.