பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே
ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது
அதன்படி முதன்முறையாக ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதன்முறையாக ஐந்து துறைகளில் பயின்ற 190 மாணவ மாணவிகளுக்கு முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரிப் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு பட்டயம் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் கணினியில் துறை தலைவர் அன்பழகன் இயந்திரவியல் துறை தலைவர் நீலகண்டன் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் ஸ்ரீபிரியா அமைப்பியல் துறை தலைவர் அபிராமி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் மும்தாஜ் பொருளாளர் காந்திமதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கல்லூரி முதல்வர் தமிழரசன் நன்றி கூறினார்.