பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட ஜல்லிகற்கள் சாலை ஓரத்தில் கொட்டுபடுவதால்…

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி சுமார் ஒரு வருடங்களாக நடைபெற்று வருகிறது.

புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகளை தோண்டப்பட்டுசாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமிப்பு செய்து தோண்டப்பட்ட ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்
அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களுக்கு கொண்டு சென்று கொட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *