திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தில்லையம்பூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், அருங்குண பெருமாள், வீரன் ஆகிய ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை சர்வ சாதகம், சிவகாம திலகம் எஸ். விஜய் சிவம் ஆலய அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருங்குண பெருமாள் ஆலய தக்கார் ம. ஆறுமுகம், ஆய்வாளர் சுதா ராமமூர்த்தி, விழா குழுவினர் மற்றும் தில்லையம்பூர் கிராம வாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.