ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபபெற்றது:-

தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் லாவண்யா கலந்து கொண்டு தலைமை ஏற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன்,
வருவாய் வட்டாச்சியர் கிருஷ்ணவேல், தேர்த்தல் தனி துணை வட்டாச்சியர் மாசாணமூர்த்தி, தேர்தல் வருவாய் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைப்பெற்ற இப்பேரணியில் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.

மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பி துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.

இப்பேரணியை கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஜோகன்னா,ஜெய டேவிசன் இம்மானுவேல், ஜெஸிக்காள் ஆகியோர் செய்தி ருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *