வலங்கைமானை அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் உதவி இயக்குனர் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவியின் பெயரில், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆலோசனைப்படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் துவக்கி வைத்தனர். முகாமில் சிறந்த கன்றுகளுக்கு உதவி இயக்குனர் சபாபதி பரிசு வழங்கினார். இதில் சக்திவேல், சங்கவி, சௌந்தர்யா உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை என 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக உதயகுமார், வைரவேல், சிவசங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில், மாரியப்பன், விஜயகுமாரி, இந்திரா ஆகியோர் சிகிச்சை அளிக்க உதவிபுரிந்தனர்.