செய்தியாளர் வீ.சக்திவேல்
மருதூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி இ சேவை கட்டிட வளாகத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அன்னக்கிளி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிராம பற்றாளர் விஜயலட்சுமி கலந்துகொண்டு முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் பல்வேறு தீர்மானங்களைநிறைவேற்றி வாசித்தார்
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும்ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர் தூய்மை காவலர்களின் பணியை பாராட்டி கௌரவத்தினர்