பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் குடிசை வீட்டில் தீ விபத்து …
2 சிலிண்டர் வெடித்தன தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் கிராமத்தில் மேலத்தெருவில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் கார்த்தி வயது 40 இவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் சென்றிருந்தார் அப்போது திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில்வீட்டுக்குள் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர்.

இதனால் வீட்டுக்குள் இருந்த தளவாட சாமான்கள் மற்றும் நகை பணம் பொருட்கள் முழுவதுமாக எரிந்து ரூ.1 லட்சம் சேதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *