செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அடுத்த பெருங்கட்டூரீல் அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெருங்கட்டூர் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா

(1) 56 அவதுதேசிய நூலக வார விழா (2) குழந்தைகள் தின விழா (3) பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் நிகழ்வாக நடைபெற்றது இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் ரா. குருமூர்த்தி தலைமை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் இ. கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.

ஊர்புற நூலகர் ஜா.தமீம் வரவேற்புரை நிகழ்த்தினார். பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சி. பிரசாத் பாபு பரிசு வழங்கினார். அசனமா பேட்டை அக்னி சிறகுகள் லயன் சங்க பொருளாளர் டி. ஜி. கணேசன் குழந்தைகள் தின சிறப்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் மா. சிவானந்தம் நூலக வார விழாவின் சிறப்புகள் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர் பிரவீன் குமார் லயன் சங்க உறுப்பினர் பாபு கலந்து கொண்டனர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்வின் இறுதியாக ஆசிரியர் மு. சந்தானம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *