வருகிற 18-11-2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்திற்கு விடுமுறை அளிக் கோரி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆட்சியரிடம் மனு;-

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.
அந்தமனுவில்;-

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி சனிக்கிழமை கோயில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது

இந்த கந்த சஷ்டி திருவிழாவில் தென்காசி மாவட்டத்தில் இருந்து அதிக முருகபக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்வார்கள் தற்போது வரும் 18-ம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட முருக பக்தர்கள் வழிபாடு செய்யமுடியாத சூழ்நிலையில் உள்ளனர் ஆதலால் தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி வருகிற 25-11-2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து வருகிற 18-11-2023 சனிக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடபட்டிருந்தது.;நிகழ்வில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *