தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம்,
வீரசிகாமணி ஊராட்சி, வடநத்தம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது.
சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார் ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அரசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்கள்.
இம்முகாமில் திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஜாஃப்ரி மற்றும் திருநெல்வேலி கோட்ட உதவி இயக்குநர் மரு.சுமதி ஆகியோர் தொழில்நுட்ப உரை ஆற்றினர்.
சுமார் 212 பசுக்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகளும் கொடுக்கப்பட்டது.
112 செம்மறி ஆடு,358 வெள்ளாடு,186 கோழி ஆகிய கால் நடைகளுக்கு நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி பிரிவு மரு.சந்திரசேகர் மற்றும் குழு,கால்நடை உதவி மருத்துவர்கள் குழு சந்திரலேகா,வசந்தா,சிமியோன்,சர்மதி,
சுனில்வர்மா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அனிதா,சந்தனமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்
.சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் நல்ல முறையில் பசுமாடுகளை பராமரிப்போருக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் , செயற்கைமுறை கருவூட்டல்,ஆண்மை நீக்கம்,செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன அரியநாயகிபுரம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் சர்மதி
நன்றியுரை வழங்கினார்.