கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சேலம் மாநாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது.
வருகின்ற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு கோவை கொடிசியா வளாகத்தில், திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்சு.முத்துசாமி,துணைச் செயலாளர் கே.இ. பிரகாஷ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ. ரவி ஆகியோர் முன்னிலையில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம் .ஏ. ஆர். கே ஹக்கீம், சேலம் இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூபாய் 12 லட்சம் வழங்கினார்.அப்பொழுது துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.