அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா

மாவட்ட கழக செயலாளர் பால துரைப்பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ரெஜி என்கிற காசி தலைமை தாங்கினார்

பொதுக்குழு உறுப்பினர் கழக சபை கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பாலகிருஷ்ணன் அவைத்தலைவர் அன்பழகன் சிற்பி பரமகுரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *