தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்..

வெறிச்சோடி காணப்பட்ட பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம்..

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருவாய் அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.போராட்டத்தின் எதிரொலியாக பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்களுக்கான சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *